செங்கலடியில் மருந்தகங்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு.
on
Monday, April 27, 2026
By
News
No comments
(செங்கலடி நிருபர் சுபஜன்)
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ், போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இன்று காலை விசேட விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருந்தகங்களை மையப்படுத்தி இந்தச் செயற்பாடு அமைந்தது. இதன்போது, வைத்தியரின் முறையான பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி எவ்வித மாத்திரைகளையோ அல்லது மருந்துப் பொருட்களையோ பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது என மருந்தக உரிமையாளர்களுக்குக்   எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை பொதுமக்கள் மற்றும் மருந்தகப் பணியாளர்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அனைத்து மருந்தகங்களின் முன்பகுதியிலும் ஒட்டப்பட்டன.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர். இதில்:
சுகாதார வைத்திய அதிகாரி
பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI)
பொலிஸ் உத்தியோகத்தர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு மருந்தகங்களின் மருந்து விநியோக நடைமுறைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். சட்டவிரோத மருந்து விற்பனையால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் மற்றும் அதனால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து இதன்போது மருந்தக உரிமையாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
Whatsapp
You may like these posts