செய்திகள்
மூதூர்-கடற்கரைச் சேனை பாடசாலை வீதி புனரமைப்பு
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026  •  2:21 PM
1 நிமிட வாசிப்பு
34 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
-மூதூர் நிருபர்-
​மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் உள்ள பாடசாலை வீதியைப் புனரமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
​2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பி.எஸ்.ரி.ஜி (PSTG) திட்டத்தின் ஊடாக இதற்காக 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
​மூதூர் பிரதேச சபை தவிசாளர் எஸ். பிரகலாதன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வீதி புனரமைப்புப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
​குறித்த வீதியானது நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
​இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.