பிரதான செய்தி
தையிட்டி விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!
May 1, 2026
Facebook
Twitter
Pinterest
WhatsApp
தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையிடலை எதிர்வரும் 2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு குறித்த வீதியினை தடுத்து எல்லையிடப்பட்டுள்ள இடப்பரப்புக்குள் வதியும் தங்களிற்கு 1987ஆம் ஆண்டின 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(1) பிரிவிற்கமைவாக அறிவித்தல் இத்தால் வழங்கப்படுகின்றது.
மேலும் குறித்த வீதியினை சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்புக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் பரிசீலனைக்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிர்வரும் 2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
தவறும் பட்சத்தில், 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(2) பிரிவிற்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் சட்டத்தின் 59(3)ம் பிரிவின் ஏற்பாடுகளிற்கு அமைவாக அகற்றப்படும் செலவீனங்கள் தங்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சட்டநடவடிக்கைகளுக்கும் தாங்கள் உட்பட நேரிடலாம் என்பதனையும் அறியத்தருகின்றேன் – என்றுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தையிட்டி காணி அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பவானி வீதி தவிசாளரால் அடையாளம் காட்டப்பட்டது.
Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Previous article
விரிவுரையாளர் கொலைச் சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Related Articles
பிரதான செய்தி
விரிவுரையாளர் கொலைச் சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
பிரதான செய்தி
அர்ச்சனா எம்பிக்கு பிணை!
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
- Advertisement -
Latest Articles
பிரதான செய்தி
விரிவுரையாளர் கொலைச் சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
பிரதான செய்தி
அர்ச்சனா எம்பிக்கு பிணை!
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
Load more