செய்திகள்
அஸ்வெசும தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
03 May 2026  •  9:34 AM
1 நிமிட வாசிப்பு
40 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
நாட்டில் உள்ள அஸ்வெசும பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இந்த முன்னோடித் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகத் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்தார்.
உலக வங்கித் திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்து 975 பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அவர்களில் சுமார் 40 சதவீதமானோர் இதுவரை இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக, தம்மிக முத்துகல கூறியுள்ளது.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியும் 13 மாவட்டங்களிலுள்ள 10 ஆயிரத்து 300 குடும்பங்களை வலுவூட்டுவதற்கான முன்னோடித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாக பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்துள்ளார்.