செய்திகள்
யாழில் மதுபான போத்தலினால் தலையில் தாக்கியதால் ஒருவர் பலி!
News Editor
18 நிமிடங்களுக்கு முன்
04 May 2026  •  10:17 AM
1 நிமிட வாசிப்பு
161 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் உயிரிழந்தார்.
குருநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். இதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஒருவர் மற்றையவர் மீது மது போத்தலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
அதில் தலையில் படுகாயமடைந்த நபர், இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிலையில், அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்இ தாக்குதலை மேற்கொண்ட குருநகர் பகுதியை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.