செய்திகள்
நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை நிலவும்
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
04 May 2026 • 2:22 PM
1 நிமிட வாசிப்பு
48 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பக் குறியீடு (Heat Index) “அவதான நிலை” (Caution Level) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்த மாறுபட்ட வானிலை காரணமாக, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை நிலவும்